மலர் மாலை 2 -பைந்தமிழ் பூக்கள் / சங்ககால மலர்கள்
நமது இலக்கியங்கள் இயற்கையை போற்றுகின்றன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் 99 வகையான மலர்களை மகளிர் குவித்து விளையாடியதாக குறிப்புகள் உள்ளன. இப்பதிவு பைந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில பூக்களை கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு மாலையாகும்.
இப்பூக்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வாழ்கின்றன. இதில் ஒவ்வொரு பூவும் பல காதல், வீர செயல்கள், சரித்திர சம்வங்களின் சாட்சியாகும். இவற்றை பார்ப்பது இப்பிறவியில் நாம் அடைந்த பேராகும்.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு:
நான் இப்பதிவில் உள்ள புகைப்படங்களுக்கு மட்டுமே பொறுப்பாவேன். பூக்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளது. இதில் தவறேனும் இருப்பின் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டவும்.
பிற பெயர்கள் : காந்தள், கார்த்திகை மலர்
ஆங்கில பெயர் : Flame lily
தாவரவியல் பெயர் : Gloriosa superba
இலக்கிய குறிப்புகள்
சங்க இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு உவமையாக கூறப்படும் மலர்.
கூடுதல் தகவல்
இது தமிழ்நாட்டின் மாநிலப்பூ. இதன் அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இந்தியாவில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
பிற பெயர்கள் : நீலசங்கு பூ, மணி பூ
ஆங்கில பெயர் : Asian pigeonwings - Violet
தாவரவியல் பெயர் : Clitoria ternatea
இலக்கிய குறிப்புகள்
குன்றத்து மகளிர், தோழிகளோடு குவித்து விளையாடி அணியாக்கிக் கொண்ட 99 பூக்களில் ஒன்று.
"மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய" - நற்றிணை
கூடுதல் தகவல்
மணி நிறம் என்பது நீலநிறம். எனவே இது மணி பூ என்றும், தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றுவதால் சங்கு பூ என்றும் அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள் : வெண்சங்கு பூ
ஆங்கில பெயர் : Asian pigeonwings - White
தாவரவியல் பெயர் : Clitoria ternatea
இலக்கிய குறிப்புகள்
கபிலர் இயற்றிய குறிஞ்சி பாட்டு நூலிலும், கலிங்கத்து பரணியிலும் இம்மலரை பற்றிய குறிப்புகள் உள்ளன.
பிற பெயர்கள் : சாமந்தி
ஆங்கில பெயர் : Marigold
தாவரவியல் பெயர் : Chrysanthemum
இலக்கிய குறிப்புகள்
இம்மலர்களை கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
இப்பூவானது பொதுவாக வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். எனினும் தற்போது மரபணு மாற்றப்பட்டு புதிய நிறங்களில் காணப்படுகிறது.
பிற பெயர்கள் : முடிதும்பை
ஆங்கில பெயர் : Thumbai or Thumba
தாவரவியல் பெயர் : Leucas Aspera
இலக்கிய குறிப்புகள்
தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் உண்டு. கம்பராமாயணத்தில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலையும், இராமன் துளசி மாலையுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.
கூடுதல் தகவல்
ஆங்கில பெயர் : Jimson weed, Thorn Apple
தாவரவியல் பெயர் : Datura stramonium
இலக்கிய குறிப்புகள்
கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று
கூடுதல் தகவல்
இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். இது பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் (பொன் ஊமத்தை) மற்றும் கருஞ்சிவப்பு (கரு ஊமத்தை) ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.
பிற பெயர்கள் : வான்பயிர், அம்பணம், அரம்பை, கதலி, பனசம்
ஆங்கில பெயர் : Banana Flower
தாவரவியல் பெயர் : Musa acuminata
இலக்கிய குறிப்புகள்
தமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. கம்பராமாயணம், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிறுபாணாற்றுப்படை சீவக சிந்தாமணி போன்ற பல இலக்கியங்களில் வாழையை பற்றிய குறிப்புகள் உள்ளன.
கூடுதல் தகவல்
செந்தொழுவன் (செவ்வாழை), இரசக்கதிலி (ரசுதாளி), தேன் வாழை (கற்பூரவல்லி), ஏற்றன் பழம் (நேந்திரம்) போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப் பழங்களின் வேறு பெயர்களாகும்.
ஆங்கில பெயர் : Indian Tulip
தாவரவியல் பெயர் : Thespesia populnea
இலக்கிய குறிப்புகள்
குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன.
கூடுதல் தகவல்
முற்காலத்தில், கிராமப்புறங்களில் சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.
ஆங்கில பெயர் : Mountain knotgrass
தாவரவியல் பெயர் : Aerva lanata
இலக்கிய குறிப்புகள்
குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் காட்டப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை மலரும் ஒன்று. இது குருவி அமர்ந்திருப்பது போலப் பூத்திருக்கும், வரகரிசிச் சோறு போல் இருக்கும், காற்றில் உதிராமல் போராடும், முன்பனிக் காலத்தில் பூக்கும், காட்டுப்பூனைக் குட்டியின் மயிர் இருக்கும், வேளை வெண்பூவை மேயும் மான் பூளையை மேயாமல் ஒதுக்கும் என சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணகி மதுரையை எரியூட்டியபோது நான்கு வருணப் பூதங்களும் வெளியேறின. அவற்றுள் ஒன்றாகிய வேளாண் பூதம் அணிந்திருந்த பூக்களில் ஒன்று பூளை என்கிறது சிலப்பதிகாரம்.
கூடுதல் தகவல்
பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் போது சேர்க்கின்றனர்.
பிற பெயர்கள் : பீர்க்கு, பீர்கம் பூ
ஆங்கில பெயர் : Sponge gourd, Egyptian cucumber or Vietnamese luffa
தாவரவியல் பெயர் : Luffa aegyptiaca
இலக்கிய குறிப்புகள்
வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை
மேலும் குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பீர்க்கம் பூவை உவமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
ஆங்கில பெயர் : Crepe jasmine, East Indian Rosebay
தாவரவியல் பெயர் : Ervatamia divaricata, Tabernaemontana divaricata
இலக்கிய குறிப்புகள்
சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சூட்டப்பட்டுள்ளது
கூடுதல் தகவல்
ஆங்கில பெயர் : Bignonia
தாவரவியல் பெயர் : Bignonia suaveolens
இலக்கிய குறிப்புகள்
இது பொதுவாக மஞ்சள் நிறத்திலும், சிலப்பகுதியில் சிவப்பு நிறத்திலும் காணப்படும். பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு பல இடங்களில் குறிப்பிடுகிறது.
மேலும் ஐங்குறுநூறு, அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை, நற்றிணை ஆகிய இலக்கியங்களிலும் இம்மலரை பற்றிய குறிப்பை காணலாம்.
கூடுதல் தகவல்
மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
பிற பெயர்கள் : தட்டை மொச்சை
ஆங்கில பெயர் : Broadbeans flower
தாவரவியல் பெயர் : Vicia faba
இலக்கிய குறிப்புகள்
இது சங்க இலக்கியங்களில் குறிப்பிட பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று
கூடுதல் தகவல்
ஆட்டுக் கொம்பவரை, ஆரால் மீனவரை, ஆனைக் காதவரை, கணுவவரை, கொழுப்பவரை, கோழியவரை, சிவப்பவரை, சிற்றவரை, தீவாந்தர வவரை, நகரவரை, பாலவரை, பேரவரை, முறுக்கவரை, கப்பல் அவரை, காட்டவரை, வீட்டவரை, சீமையவரை, சீனியவரை, கொத்தவரை, குத்தவரை, சுடலையவரை அல்லது பேயவரை, பட்டவரை, வாளவரை, தம்பட்டவரை, சாட்டவரை என தமிழறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் வகைப்படுத்தியுள்ளார்.
ஆங்கில பெயர் : Tamanu, Mastwood, Beach calophyllum, Beauty leaf
தாவரவியல் பெயர் : Calophyllum inophyllum
இலக்கிய குறிப்புகள்
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.
- மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தர்
(புன்னை மரத்தின் பூ சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாகக் கூறுகின்றார்).
இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.
பிற பெயர்கள் : வேப்பம் பூ
ஆங்கில பெயர் : Neem flower
தாவரவியல் பெயர் : Azadirachta indica
இலக்கிய குறிப்புகள்
வேம்பு பாண்டிய முடிமன்னர்களின் குடிப்பூவாகும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
கூடுதல் தகவல்
1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி 2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.
ஆங்கில பெயர் : Night-flowering jasmine
தாவரவியல் பெயர் : Nyctanthes arbor-tristis
இலக்கிய குறிப்புகள்
வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
கூடுதல் தகவல்
பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.
ஆங்கில பெயர் : Porcupine flower
தாவரவியல் பெயர் : Barleria prionitis
இலக்கிய குறிப்புகள்
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் 99 மலர்களில் ஒன்று என திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் குறிப்பிடுகிறது. இப்பூவை பற்றிய குறிப்பு சங்கப்பாடல்களில் இரண்டு இடங்களில் உள்ளது.
ஆங்கில பெயர் : Ixora, Jungle geranium, Flame of the woods or Jungle flame or Pendkuli
தாவரவியல் பெயர் : Ixora coccinea
இலக்கிய குறிப்புகள்
முருகக் கடவுள் தன் தலையிலே சூடும் கண்ணிமாலைகளில் ஒன்று இந்தச் செச்சை என்னும் வெட்சிப் பூவாலானது (செய்யன் ...கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்) - திருமுருகாற்றுப்படை
குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.
கூடுதல் தகவல்
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. இது சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் முதலிய நிறங்களில் காணப்படுகிறது. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
ஆங்கில பெயர் : Crown flower
தாவரவியல் பெயர் : Calotropis gigantea
இலக்கிய குறிப்புகள்
அனைத்து சங்க இலக்கிய புலவர்களும் தங்கள் பாடல்களில் ஒப்புமை கூற எருக்கஞ் செடியை பயன்படுத்தியுள்ளனர். “குறுமுகழ் எருக்காவ் கண்ணி” என நற்றிணையிலும், “குவியினார் எருக்கு” என கபிலரும், “புல்லெருக்கங்கண்ணி நறிது” என தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது.
கூடுதல் தகவல்
அதர்வண வேதத்தில் எருக்கஞ்செடி பற்றி கூறப்பட்டுள்ளது. நாரத புராணத்தில் சிவ பெருமானுக்கு எருக்கம் பால் வைத்து படைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அக்கினி புராணத்தில் மன்னர் எருக்கம் பூமாலை அணிந்து சென்றால் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. "சிவமஞ்சரி” எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர் “எருக்கம் மலர்” என்று கூறப்படுகிறது.
ஆங்கில பெயர் : Arabian jasmine or Sambac jasmine
தாவரவியல் பெயர் : Jasminum sambac
இலக்கிய குறிப்புகள்
மாலையில் மலர்ந்து, இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும் பூ நள்ளிருள்-நாறி அல்லது இருள்நாறி என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவை இருவாட்சி என அழைக்கப்படும் இப்பூவையோ அல்லது மரமல்லிகை என வழங்கப்படும் பூவையோ இருக்க கூடும்.
பிற பெயர்கள் : அடுக்கு மல்லி
ஆங்கில பெயர் : Type of Jasmine
தாவரவியல் பெயர் : Jasminum sambac
இலக்கிய குறிப்புகள்
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் கொகுடி (Jasminum sambac) மலரும் ஒன்று. இது மரமல்லி அல்லது அடுக்குமல்லியாக இருக்க கூடும். அதில் இந்த நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கில பெயர் : Beach Morning Glory, Goat's Foot
தாவரவியல் பெயர் : Ipomoea cairica
இலக்கிய குறிப்புகள்
"குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்" - நற்றிணை, பாடல் 254
இம்மலர் சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் நெய்தல் நிலத்திலே விளைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற பெயர்கள் : ஆவிரை அல்லது மேகாரி
ஆங்கில பெயர் : Matura tea tree, Avaram, Ranawara
தாவரவியல் பெயர் : Cassia auriculata
இலக்கிய குறிப்புகள்
ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ என தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார்.
குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம்.
காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம்.
இவ்வாறெல்லாம் பல இடங்களில் இப்பூ குறிப்படப் படுகிறது.
ஆங்கில பெயர் : Ivy gourd, scarlet gourd, tindora and kowai
தாவரவியல் பெயர் : Coccinia grandis
இலக்கிய குறிப்புகள்
பிற பெயர்கள் : மகிழம், இலஞ்சி
ஆங்கில பெயர் : Spanish cherry, Medlar, Bullet wood
தாவரவியல் பெயர் : Mimusops elengi
இலக்கிய குறிப்புகள்
ஆங்கில பெயர் : Memecylon umbellatum
தாவரவியல் பெயர் : Memecylon umbellatum
இலக்கிய குறிப்புகள்
ஆங்கில பெயர் : Flame-of-the-forest, Bastard teak
தாவரவியல் பெயர் : Butea frondosa
இலக்கிய குறிப்புகள்
தாவரவியல் பெயர் : Cardiospermum halicacabum
இலக்கிய குறிப்புகள்
பழங்காலத் தமிழகத்தில் போரின்போது அரண்களை முற்றுகையிடும்போது, அதன் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் உழிஞைத் திணை என்ற திணை அமைந்துள்ளது
தாவரவியல் பெயர் : Vitex negundo
இலக்கிய குறிப்புகள்
முற்றுகையைத் தகர்த்தெழும் வீரர்கள் குடும் போர் மலர் இது. இதன் பூங்கொத்து அகத்துறையிலும் புறத்துறையிலும் பேசப்படுகின்றது. குறிஞ்சிப் பாட்டில் (89) குறிப்பிடப்படும் சிந்துவாரம் என்பதற்குக் கருநொச்சி என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர்.
இலக்கிய குறிப்புகள்
தேவலோகத்தில் பெருமாள் பாரிஜாத மலரில் வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அவர் பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்த போது தன் மனைவி சத்யபாமாவின் ஆசைக்கேற்ப இம்மலரை பூலோகத்திற்கு கொண்டுவந்தார் என்று புராணங்கள் உள்ளன.
கூடுதல் தகவல்
- Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு
- Wikipedia, Google - பல்வேறு தகவல்களுக்கு
- இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…
பிற பதிவுகளை பார்க்க
Nice 👍
ReplyDeleteAwesome
ReplyDelete