பழந்தமிழர்கள் எப்போதும் பெயர்கள் சூட்டுவதில் சிறப்பானவர்களாகவே திகழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களுக்கு அவர்கள் சூட்டிய காரணப் பெயர்கள் மிகச் சரியானதாக இருக்கும். மேகமலையும் அப்படித்தான். ஆம்! இங்குள்ள மலைச் சிகரங்களில் மேகங்கள் தழுவிச் செல்லும் காட்சிகள் ரம்மியமாக உள்ளது.
மேகமலை, தேனியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள, அதிகம் அறியப்படாத அற்புதமான மலைவாசஸ்தலம். அழகான மலைப்பாதையில், தேயிலை தோட்டங்கள் நடுவே பயணித்தால் மேகங்களுக்கு நடுவே உள்ள ஏரியை அடையலாம். மலைமேல் கடைகளும், உணவகங்களும், தங்குமிடங்களும் அதிகம் இல்லாததால் காலையில் சென்று மாலையில் திரும்பிவிடுவது நல்லது. குடும்பத்துடன் ஒருநாள் பயணம் சென்று இயற்கையின் மடியில் இளைப்பாறி, புகைபடங்கள் எடுக்க அற்புதமான இடம்.
எனது மேகமலை பயணத்தின் போது எடுக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளின் புகைப்படங்கள், இதோ உங்களுக்காக...
மேகங்கள் கொஞ்சும் மேகமலை
மலையின் பின்னே எட்டிப்பார்க்கும் மேகம்
மரங்களின் பின்னே மறைந்து விளையாடும் மேகம்
மரக்கிளையில் சிக்கிக்கொண்ட மேகம்
நீர் கீழே, மேக அலை மேலே...
நீர்நிலைகள்
மேகமலை ஏரியின் எழில்மிகு தோற்றம்
சில பூக்கள்
தேயிலை தோட்டங்கள்
மலைச்சிகரங்கள்
மேலும் சில புகைபடங்கள்
வண்ணத்துப்பூச்சிகளின் அணிவகுப்பு
மலரின் மகரந்தத்தை நுகரும் ஈ
இயற்கையை படமெடுக்கும் நண்பர்
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi7S க்கு...
- பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
Seema😍
ReplyDelete